ADDED : டிச 25, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி, நேற்று திருவொற்றியூர், தேரடியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், 3,000 பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ, குப்பன், கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.