sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.2 கோடி நிலத்தை அபகரித்த அம்பத்துார் நபருக்கு 'காப்பு'

/

ரூ.2 கோடி நிலத்தை அபகரித்த அம்பத்துார் நபருக்கு 'காப்பு'

ரூ.2 கோடி நிலத்தை அபகரித்த அம்பத்துார் நபருக்கு 'காப்பு'

ரூ.2 கோடி நிலத்தை அபகரித்த அம்பத்துார் நபருக்கு 'காப்பு'


ADDED : ஆக 29, 2025 10:32 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, போலி ஆவணங்கள் தயாரித்து, 2 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.

மாதவரம், எருக்கஞ்சேரி, ஜி.என்.டி., சாலையைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது தாய் செல்வக்கனி அம்மாள் என்பவருக்கு சொந்தமாக, அம்பத்துார், ஒரகடம் கிராமத்தில், 3,410 சதுர அடி இடம் உள்ளது.

அந்த இடத்தில், அம்பத்துாரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கல், மண், சிமென்ட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கணேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த விட அவரது மகன் அசோக்குமார், 40, அந்த கடையை நிர்வகித்து வந்துள்ளார்.

அவரது மனைவி செல்வக்கனி, அசோக்குமாருக்கு உதவியாக இருந்துள்ளார். நிலத்தின் உரிமையாளரின் பெயரும், தன் மனைவியின் பெயரும் ஒன்றாக இருப்பதால், அந்த இடத்தை அபகரிக்க அசோக்குமார் திட்டமிட்டார். போலி ஆவணங்கள் வாயிலாக பட்டாவை தயார் செய்துள்ளார்.

தன் மனைவி செல்வக்கனியை வைத்து, மகள் நர்மதாவிற்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். பின், அந்த இடத்தை சையது காதர் அமீத் ஜமால் மற்றும் அவரது மனைவிக்கு, 1.60 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிவானந்தம், தன் தாய் செல்வக்கனி பெயரில் உள்ள, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த அசோக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதன்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, அசோக்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us