/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு
/
பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு
ADDED : பிப் 20, 2025 12:14 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், அசோக் நகரில் வசிக்கும் அழகுராஜ் - கீர்த்தனா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தர்ஷினி.
நேற்று காலை, சமையல் பாத்திரங்களை வைத்து, தர்ஷினி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எவர்சில்வர் பாத்திரத்தில் குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது.
இதனால், மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுதது. உடனே பெற்றோர், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, குழந்தையை துாக்கி சென்றனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திபாகர் மற்றும் செவிலியர்கள், குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரத்தை, அரை மணி நேரம் போராடி, தடிமனான கத்தரிகோலால் துண்டித்து தனியே எடுத்தனர். இதையடுத்து, குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.