/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூத்த குடிமக்களுக்கு 'புத்துணர்ச்சி மையம்' தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
/
மூத்த குடிமக்களுக்கு 'புத்துணர்ச்சி மையம்' தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
மூத்த குடிமக்களுக்கு 'புத்துணர்ச்சி மையம்' தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
மூத்த குடிமக்களுக்கு 'புத்துணர்ச்சி மையம்' தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
UPDATED : ஆக 26, 2025 10:44 AM
ADDED : ஆக 26, 2025 12:37 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கான புத்துணர்ச்சி மையம் உள்ளிட்ட ஐந்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், ஐந்து புதிய அறிவிப்புகளை மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 275 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜோசப் அண்ணாதுரை, தி.மு.க., 2வது மண்டல குழு தலைவர்: மண்டலங்களில் கூட்டம் நடத்தி நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்காததால், ஒவ்வொரு மண்டலத்திலும் ஏகப்பட்ட பணிகள் நிலுவையில் உள்ளன.
அதனால், மண்டல கூட்டங்கள் நடத்த முடியவில்லை. கவுன்சிலர்களுக்கு பதில் கூற முடியவில்லை. 2வது மண்டலத்தில், 5 மாதங்களாக கூட்டமே நடத்தவில்லை.
புஸிராபானு, ம.தி.மு.க., 26வது வார்டு: குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலை - ராதா நகரை இணைக்கும் வகையில் கட்டப்படும் சுரங்கப்பாதைக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும்.
செந்தில்குமார், காங்கிரஸ், 25வது வார்டு: மூன்றாவது மண்டலத்தில், மண்டல குழு தலைவர் இல்லை. அதோடு, கூட்டமும் நடத்துவதில்லை. அதனால், தங்களது வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து, யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது தெரியவில்லை.
சாய்கணேஷ், அ.தி.மு.க., 47வது வார்டு: அய்யப்பன் தெரு, கந்தசாமி காலனியில், சமீபத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலை, சரியாக போடப்படவில்லை. ஆண்டாள் தெருவில், பணி ஆணை கொடுத்தும், ஒரு வருடமாக பூங்கா சீரமைப்பு பணி துவங்கவில்லை.
தாமோதரன், தி.மு.க., 45வது வார்டு: தாம்பரம் - வேளச்சேரி சாலை, கேம்ப் ரோடு சந்திப்பில், கடைகளின் மேற்பகுதியில் ராட்சத பேனர்கள் வரிசையாக உள்ளன. அந்த பேனர்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என தெரியவில்லை.
பாலச்சந்தர், கமிஷனர்: மாநகராட்சிகளில், வருவாய் ஈட்டுவதில், தாம்பரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாநகராட்சிக்கு, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என, 60 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மண்டல வாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை பொறுத்தவரை, தாம்பரம் மாநகராட்சியில் தான் அதிகப்படியான மனுக்கள் வந்துள்ளன.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில், அனுமதி பெறாத பேனர்கள் அகற்றப்படும். ஐந்து மண்டலங்களுக்கும் கால்வாய்களை துார்வார வசதியாக, 'ஜெட்ராடிங்' இயந்திரம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்

