/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
UPDATED : ஏப் 23, 2025 04:19 AM
ADDED : ஏப் 23, 2025 12:14 AM
சென்னை,கோடை கால விடுமுறையையொட்டி, திருச்சி - தாம்பரம் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ திருச்சியில் இருந்து வரும் 29 முதல் ஜூன் 29ம் தேதி வரை, செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
★ தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில், மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

