sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஜூலை 10, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,அமெரிக்க வாழ் மூத்த தம்பதியின் 4.37 கோடி ரூபாய் திருடிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஜானகிராமன், 72. இவரது மனைவி மல்லிகா, 68. இருவரும், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இவர்கள், அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றில், 4.37 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். இந்த கணக்கை கையாள, தி.நகரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு உரிமை அளித்து உள்ளனர்.

மேலும் வீட்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள ரவியிடம், காசோலைகளையும் வழங்கி உள்ளனர்.

அந்த காசோலையை, நம்பிக்கையின் அடிப்படையில் வங்கியின் மேலாளராக இருந்த மஞ்சுளா என்பவரிடம் ரவி கொடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நிரந்தர வைப்பு தொகைக்கான காலம் முடிந்துவிட்டதால், மொத்த பணத்தையும் எடுக்க ரவி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, 4.37 கோடி ரூபாயும், முன்கூட்டியே எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் ரவி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், விஜய் ஜானகிராமன்,மல்லிகா ஆகியோர் தங்களின் நிரந்தர வைப்பு தொகையை முன் கூட்டியே எடுத்தது போல, மஞ்சுளா போலியாக கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து மஞ்சுளாவுடன் மோசடியில் ஈடுபட்ட அவரது நண்பர்களான நாகேஸ்வரன், 52, ஆறுமுககுமார், 63, ஆகிய இருவரை, 7ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று அடையாறு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாவின் தோழியான சியாமளா, 50, என்பவரை, நேற்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us