sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

/

ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது


ADDED : ஜூலை 17, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து, கஞ்சா பயன்படுத்தியது தொடர்பாக, 11 பேரை கைது செய்த போலீசார், நேற்று மேலும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில், 'சோமர்செட்' என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு தங்கியுள்ள சிலர் கஞ்சா பயன்படுத்தி வருவதாக, பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கஞ்சா பயன்படுத்தி வந்த சூளையைச் சேர்ந்த ஜெகதீஸ்வர், 34, உட்பட, 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 35 கிராம் கஞ்சா, 48 மில்லி கிராம் ஓ.ஜி., கஞ்சா, ஐ போன் உட்பட, 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, 39, என்பவரை, பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, 3.25 கிராம் கஞ்சா, அவற்றை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள், ஐ போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us