/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்வளத்துறையில் பணியாளராக விண்ணப்பிக்கலாம்
/
மீன்வளத்துறையில் பணியாளராக விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 11, 2024 01:20 AM
சென்னை:சென்னையில், பிரமத மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 'சாகர் மித்ரா' எனும், 21 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
மீன்வள அறிவியல், கடல் உயிரியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், சூரியநாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை - 13 என்ற முகவரிக்கு, வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 93848 24245, 93848 24407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

