sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நேபாள தொழிலாளர்கள் கடத்தலா?

/

நேபாள தொழிலாளர்கள் கடத்தலா?

நேபாள தொழிலாளர்கள் கடத்தலா?

நேபாள தொழிலாளர்கள் கடத்தலா?


ADDED : ஆக 20, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், கட்டுமான பணிக்காக சென்னை வந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரை அடுத்து, அம்பத்துாரில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில், கட்டுமான பணிகளுக்காக தனியார் மேன்பவர் ஏஜன்சியின் ஏற்பாட்டில், நேபாளம் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை வந்தனர்.

அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர், அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பகுதியில், ரமேஷ் என்பவர் நடத்தி வரும் மேன்பவர் நிறுவனத்திடம் அவர்களை ஒப்படைத்துள்ளார். ஒருவருக்கு 2,000 ரூபாய் என, 8,000 ரூபாய் வாங்கி சென்றதாக தெரிகிறது. அங்கு ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கியுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர், வேறு ஒரு நிறுவனத்திடம் தங்களை ஒப்படைத்து சென்றதை அறிந்த அவர்கள், தங்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள், 'நாங்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள்' எனவும் கூறி, அவர்களை அனுப்ப மறுத்துள்ளனர்.

இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாருக்கு, நேற்று மாலை புகார் வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின், அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தினருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பகுதிமக்கள் அச்சம் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரமேஷ் என்பவர் நடத்தி வரும், மேன்பவர் நிறுவனத்தில், 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் உள்ளதாகவும், அவர்கள் கொரட்டூர் ஏரிக்கரையில் தார்ப்பாயால் அமைக்கப்பட்ட குடிசையில் கொத்தடிமைகள் போல தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களால், சமூக விரோத செயல்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் பகுதி மக்கள்அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us