sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரசாயன பழங்கள் விற்பனை அதிகாரியிடம் வாக்குவாதம்

/

ரசாயன பழங்கள் விற்பனை அதிகாரியிடம் வாக்குவாதம்

ரசாயன பழங்கள் விற்பனை அதிகாரியிடம் வாக்குவாதம்

ரசாயன பழங்கள் விற்பனை அதிகாரியிடம் வாக்குவாதம்


ADDED : பிப் 15, 2025 08:50 PM

Google News

ADDED : பிப் 15, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கோயம்பேடு, உணவு தானிய சந்தையில் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பேசும்போது, ''கோயம்பேடு சந்தையில், வாழைத்தார், மாம்பழம் ஆகியவை ஆபத்தான முறையில் செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வதால், அவற்றை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, அவ்வாறு செய்யும், கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என்றார்.

அப்போது, அங்கிருந்த வியாபாரி ஒருவர், 'பொதுவாக, அனைவரும் ஏதோ தவறு செய்வது போல் பேசுகின்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி என எங்களை அழைத்து விட்டு, மிரட்டும் தொனியில் பேசுவதா' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மற்ற வியாபாரிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தை தொடர்ந்து, நியமன அலுவலர் சதீஷ்குமார், மேடையில் இருந்து கீழ் இறங்கி, வியாபாரிகளிடம் 'மன்னித்து விடுங்கள்' எனக்கூறி சமாதானப்படுத்தினார்.

கோயம்பேடு பழ வியாபாரிகள் கூறுகையில், 'கோயம்பேடு பழ சந்தையில் சில வியாபாரிகள், ரசாயன 'ஸ்பிரே' வாயிலாக பழங்களை பழுக்க வைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், அனைவரும் தவறு செய்வது போல் சித்தரிக்க வேண்டாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us