/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவிக்கு அர்ஜுனா விருது
/
கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவிக்கு அர்ஜுனா விருது
கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவிக்கு அர்ஜுனா விருது
கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவிக்கு அர்ஜுனா விருது
ADDED : ஜன 05, 2025 09:48 PM

நாமக்கல்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் - விஜி தம்பதியின் மகள் துளசிமதி. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில், மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்தாண்டு, ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் நடந்த சர்வதேச பாராலிம்பிக்  பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அவரை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். இந்நிலையில், மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால், துளசிமணி அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். டில்லியில் வரும், 17ல் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துளசிமதிக்கு அர்ஜுனா விருதை வழங்க உள்ளார்.
துளசிமணி கூறியதாவது:
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற முடியாமல் இருந்தேன். என் தந்தையின் ஊக்குவிப்பால், நானாகவே பயிற்சி பெற்று, பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது, மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தகுதி பெற்றுள்ளேன். இந்த விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

