sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முன்விரோதம் காரணமாக இருவரை தாக்கியோர் கைது

/

முன்விரோதம் காரணமாக இருவரை தாக்கியோர் கைது

முன்விரோதம் காரணமாக இருவரை தாக்கியோர் கைது

முன்விரோதம் காரணமாக இருவரை தாக்கியோர் கைது


ADDED : ஜூலை 03, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில், முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவரை, தாக்கியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி, ராம்நகரைச் சேர்ந்தவர் அரவிந்த், 29; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 29ம் தேதி ராம்நகர், 2வது தெருவில் அவரது மாமா நாகராஜன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆகாஷ், அவினாஷ், ஜெகதீஷ் ஆகிய மூவரும், முன்விரோதம் காரணமாக அரவிந்த் மீது தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த அவரது மாமா நாகராஜன் மீதும் செங்கல்லால் தாக்கிதப்பிச் சென்றனர்.

இதில் காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட, ஆகாஷ், 26, அவினாஷ், 19, ஜெகதீஷ், 21 ஆகிய மூவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us