/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரதி வரிகளுக்கு நடன அசைவு கல்லுாரியில் அசத்திய கலைஞர்கள்
/
பாரதி வரிகளுக்கு நடன அசைவு கல்லுாரியில் அசத்திய கலைஞர்கள்
பாரதி வரிகளுக்கு நடன அசைவு கல்லுாரியில் அசத்திய கலைஞர்கள்
பாரதி வரிகளுக்கு நடன அசைவு கல்லுாரியில் அசத்திய கலைஞர்கள்
ADDED : டிச 10, 2024 12:43 AM

வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், பாரதி பிறந்த தின விழாவை முன்னிட்டு, மாநில கலாசார நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்விழாவின் இரண்டாம் நாளான நேற்று, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில், தமிழகத்தின் பரதம், கேரளாவின் மோகினியாட்டம், ஆந்திராவின் குச்சிப்பிடி, ஒடிசாவின்ஒடிசி, உ.பி.,யின் கதக் ஆகிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில், பல நாட்டியங்கள், பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தன. அதிலும், பாரதியின் 'ஆசை முகம் மறந்து போச்சா?' என்ற பாடலுக்கு, கதக் நடனத்தை வடிவமைத்திருந்தது, பாராட்டத்தக்கதாக இருந்தது.
அதேபோல், ஆந்திராவின் பிரபலமான குச்சிப்புடி நடனத்தை, தாம்பளத்தட்டில் நின்றபடி ஆடியவர்கள், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர். முன்னதாக பஷீர் அகமது கல்லுாரி மாணவியர் 150 பேர், புதிய ஆத்திச்சூடி எழுதப்பட்ட பதாகைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, மேடையேற்றி சிறப்பித்தனர்.
- நமது நிருபர் -

