/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் பெண்கள் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் பெண்கள் கைது
ADDED : ஜன 23, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற, வடமாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரித்து, பைகளை சோதனை செய்தனர்.
அவற்றில், 13 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரித்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷீலா கந்தா, 48, நியாட்டி ராய், 41, என்பதும், அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து, ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

