/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ, பைக் தீ வைத்து எரிப்பு: இருவருக்கு வலை
/
ஆட்டோ, பைக் தீ வைத்து எரிப்பு: இருவருக்கு வலை
ADDED : ஜன 28, 2026 06:16 AM
சென்னை: போரூர் அருகே முகலிவாக்கம், எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ், 25. ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் வீட்டின் வெளியே நண்பர் பாலா, 28, என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
பாலாவின் நடவடிக்கை சரி இல்லாததாக கூறி, அவருடன் ஏன் பழகுகிறாய் என, முத்துராஜை அவரது தாய் கண்டித்துள்ளார். அப்போது, பாலா, முத்துராஜின் தாயை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், பாலாவை அடித்து உதைத்து அனுப்பினார்.
இந்நிலையில் முத்துராஜ் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது ஆட்டோ மற்றும் பல்சர் பைக்கை, நள்ளிரவு அங்கு வந்த பாலா மற்றும் அவரது நண்பர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றனர்.
இதில், ஆட்டோ மற்றும் பைக் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின்படி மவுலிவாக்கம் போலீசார் வழக்குபதிந்து பாலா மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

