ADDED : அக் 30, 2024 12:13 AM
அ நிறம் | அளவு
போரூர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 50. இவர், தன் மகள் மற்றும் பேத்தி ஆகியோருடன், கடந்த 16ம் தேதி, தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று, ஆட்டோவில் வீடு திரும்பினர்.
தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியது. இதில், வெண்ணிலா மற்றும் அவரது 4 வயது பேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆட்டோவில் வந்த அவரது மகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், நேற்று உயிரிழந்தார்.
