sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர்கள் மோதல்

/

சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர்கள் மோதல்

சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர்கள் மோதல்

சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர்கள் மோதல்


ADDED : மார் 16, 2025 10:26 PM

Google News

ADDED : மார் 16, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்:வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களான ஆதி, 18, சுந்தர், 24, பார்த்திபன், 24, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 24, சஞ்சய்குமார், 26, ஆகியோர், மூலக்கடையில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வரை ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

அதே ரூட்டில், ஆட்டோ ஓட்டுனர்களான கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திக், 24, செல்வசாலமன், 23, ஹரிஹரன், 20, மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 21, ஆகியோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களுக்குள் ஆட்களை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆதியை, மற்றொரு கும்பலைச் சேர்ந்த ஹரிஹரன், கார்த்தி ஆகியோர் தாக்கி உள்ளனர்.

அதற்கு பழி வாங்குவதற்காக, ஆதி அவரது அண்ணன் சஞ்சய் என்பவரிடம் கூறியதால், அவர் அவரது கூட்டாளிகளுடன் ஹரிஹரன், கார்த்தியை வெட்டுவதற்காக, மூலக்கடை ஜங்ஷனில் கத்தியுடன் நேற்று சுற்றி திரிந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள், கொடுங்கையூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கத்தியுடன் சுற்றி திரிந்த கார்த்தி, ஹரிகரன் மற்றும் சஞ்சய்குமார், சரண்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us