sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்

/

 ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்

 ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்

 ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்


ADDED : நவ 20, 2025 03:13 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 48 வார்டுகளில், 92,300 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக மாநகராட்சிக்கு, ஆண்டுதோறும் 81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய், மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்நிலையில், 2025 - 26ம் நிதி ஆண்டில் 40 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, ஆவடி மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. அந்த இலக்கை, முதல் அரையாண்டிலேயே, வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் அரை ஆண்டுக்கான வரி வசூல், கடந்த மாதம் துவங்கியது. அதன்படி, கடந்த அக்., 1ம் தேதி முதல் நேற்று வரை, 2 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது.

வருவாய்த்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், ஜனவரி முதல் நவம்பர் வரை, இலக்கை தாண்டி மொத்தமாக, 42 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us