sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.32 லட்சம் சீட்டு மோசடி  ஆவடி தம்பதி சிக்கினர்

/

ரூ.32 லட்சம் சீட்டு மோசடி  ஆவடி தம்பதி சிக்கினர்

ரூ.32 லட்சம் சீட்டு மோசடி  ஆவடி தம்பதி சிக்கினர்

ரூ.32 லட்சம் சீட்டு மோசடி  ஆவடி தம்பதி சிக்கினர்


ADDED : ஜன 31, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,ஆவடி, பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஹெலன், 40. இவர், ஆவடியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது கடைக்கு, ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி வரும் போது பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண், கணவர் ஜெகதீஸ்வர ராவ் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்துவதாகவும், அதில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதன்படி, ஹெலன் 3 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார். 11 மாதம் வரை 93,785 ரூபாய் கட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் பணம் கட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டி இருந்தது. விசாரித்த போது, 2023 முதல் 2024 வரை தன்னை போல் 20 நபர்களிடம் ஏலச்சீட்டு மற்றும் கடன் என மொத்தம், 32 லட்சம் வாங்கி ஏமாற்றி, தலைமறைவானது தெரிந்தது. இது குறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான தனிப்படை போலீசார், நங்கநல்லுாரில் பதுங்கி இருந்த ஜெகதீஸ்வரராவ், 42, மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us