sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி

/

பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி

பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி

பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி


ADDED : டிச 31, 2024 12:38 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 40வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். 4வது பிளாக்கில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள எம்.ஜி.ஆர்., நகர் சாலை ஓரத்தில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர்.

அதேபோல், குண்டும்குழியுமான சாலை அருகே திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர், புழுதிக்காற்றை சுவாசித்து பெரும் அவதிப்படுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் 11 லட்சம் ரூபாயில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது.

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி கூடம், தற்போது துாசி படிந்து, செடி கொடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.

தற்போது, உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, காயலான் கடை பொருளாக மாறும் நிலை உருவாகி வருகிறது. மக்கள் வரிப்பணம் வீணாவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பயிற்சி கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us