sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்

/

அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்

அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்

அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்


ADDED : மார் 02, 2024 12:20 AM

Google News

ADDED : மார் 02, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், மார்ச் 3ம் தேதி, அய்யா வைகுண்ட பரம்பொருளின் அவதார திருநாள் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நாளை 192வது ஆண்டு அவதார திருநாளாகும். இதையொட்டி, பழைய வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப நாயக்கன் தெருவில் இருந்து, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில், அய்யா அருளிச் செய்த, அகிலத் திரட்டு ஆகமத்தை வைத்து, அவதார திருநாள் ஊர்வலம் துவங்கும்.

ஊர்வலத்தை, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைப்பர்.

ஊர்வலமானது, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மணலி விரைவு சாலை வழியாக, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடையும்.

அவதார திருநாள் ஊர்வலத்தில், சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாலை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.






      Dinamalar
      Follow us