/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பச்சிளம் குழந்தை சடலம் குப்பை தொட்டியில் மீட்பு
/
பச்சிளம் குழந்தை சடலம் குப்பை தொட்டியில் மீட்பு
ADDED : ஜன 03, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானகரம் மதுரவாயல் அடுத்த, வானகரம் ஊராட்சி, ஓடமா நகர் கண்ணியம்மன் கோவில் பகுதியில், துாய்மை பணியாளர்கள் நேற்று, சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியில், துணி சுற்றப்பட்ட நிலையில், பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டறிந்தனர்.
தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

