sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

/

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : ஏப் 02, 2025 11:43 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்,

சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி, 46. சித்தாலப்பாக்கத்தில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, மாடம்பாக்கம் சாலை வழியாக, 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

கோவிலாஞ்சேரி சந்திப்பு அருகே வந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியது.

இதில், தலை நசுங்கி பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து பயந்துபோன லாரி ஓட்டுனர், வாகனத்தை அங்கேயே விட்டு தப்பினார்.

போலீசார் விரைந்து, பாலாஜியின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us