/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு துவக்கம்
/
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு துவக்கம்
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு துவக்கம்
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : நவ 19, 2024 12:25 AM

சென்னை,
சென்னையின் முக்கிய ஏரியாக, வேளச்சேரி ஏரி உள்ளது. மொத்தம், 265 ஏக்கர் பரப்பில் இருந்த ஏரி, அரசு திட்டங்கள், சாலை விரிவாக்கம் போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பில் சுருங்கியுள்ளது.
எல்லா திசைகளில் இருந்தும் கழிவுநீர் விடுவதால், ஏரி மோசமான நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுத்து நீர்நிலைகளை மேம்படுத்த, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், 19.40 கோடி ரூபாயில், ஏரியில் படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை, அக்.,30 ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஏரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கரையிலும் 800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதையடுத்து, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரிய ஆகிய துறைகள் சேர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கியுள்ளன.
இதற்காக, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
இப்பணி முடிந்ததும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவோரில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் வழங்கப்பட உள்ளன.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இங்கு வசிப்போர், முகவரி ஆவணங்களான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல், நகல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணி முடிந்ததும், அவர்களுக்கான மாற்று வீடு பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.