sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒற்றுமைக்கு பாடுபடும் பா.ஜ., வாஜ்பாயி விழாவில் சரத்குமார் பேச்சு

/

ஒற்றுமைக்கு பாடுபடும் பா.ஜ., வாஜ்பாயி விழாவில் சரத்குமார் பேச்சு

ஒற்றுமைக்கு பாடுபடும் பா.ஜ., வாஜ்பாயி விழாவில் சரத்குமார் பேச்சு

ஒற்றுமைக்கு பாடுபடும் பா.ஜ., வாஜ்பாயி விழாவில் சரத்குமார் பேச்சு


ADDED : டிச 25, 2024 11:55 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழக பா.ஜ., வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில், கிறிஸ்துமஸ் விழா, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் கபிலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நடிகர் சரத்குமார் பேசியதாவது:

பிரதமர் மோடியை ஆதரித்தால், நாடு முன்னேறி விடும் என்பதால், ஜாதி, மத அடிப்படையில் நம்மை பிரித்தாள சிலர் முயல்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒற்றுமையை பா.ஜ., ஏற்படுத்தி வருகிறது.

இன்று அனைத்து மாநிலத்தவரும் சிரமமின்றி பயணிக்க தங்க நாற்கர சாலை திட்டத்தை கொடுத்தவர் வாஜ்பாயி. பொக்ரான் திட்டத்தால், சக்தி வாய்ந்த நாடாக உலகிற்கு இந்தியாவை காட்டியவர். இதைப் பற்றி மக்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.

இன்று யார் வேண்டுமானாலும் காஷ்மீர் சென்று வர முடியும். அந்தளவு பயங்கரவாதத்தை அங்கு ஒடுக்கியவர் மோடி. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் விரைவில் நடக்கும்; தாமரை மலரும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us