sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள் 

/

பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள் 

பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள் 

பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள் 


ADDED : மே 10, 2025 12:35 AM

Google News

ADDED : மே 10, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மற்றும் புறநகரில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தனியார் ஒப்பந்ததாரர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது, மின் வாரியத்தின் மின் கேபிள்களை பழுதாக்கி விடுகின்றனர். இதனால், மின் தடை ஏற்படுகிறது.

இதை கருத்தில் வைத்து ராதாகிருஷ்ணன் தலைமையில், பல துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது.

அதில், துறை அதிகாரிகளிடம், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இனி வரும் காலங்களில் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ளும்போது, மின் கேபிள்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.

சாலையில் பணிகளை துவங்கும் முன் கேபிள் செல்லும் வரைபடங்களை, மின் வாரியத்திடம் இருந்து பெற்று, அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் பணிகளை மேற்கொள்ளும் போது, கேபிள் இருந்தால் உடனே பணிகளை நிறுத்தி, அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கேபிள் தொடர்பான தகவலை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியதாக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us