/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
சென்ட்ரல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 11, 2025 11:51 PM

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இங்கு, நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பார்சல் அலுவலகத்தின் இ - மெயில் முகவரிக்கு, நேற்று பகல் 12:30 மணியளவில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். உடனடியாக, ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்ப நாய்களுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அனைத்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு பகுதிகளில், தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
பயணியரின் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டதால், பயணியரிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில், இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இ - மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.