/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 29, 2025 12:23 AM
சென்னை,
சென்னை, நேப்பியர் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை, 5:45 மணியளவில், இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
அதில், கடலோர காவல்படை அலுவலகத்திற்கும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்ட இருந்தது.
மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை வைத்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சேலத்தில் இருப்பதால், இங்குள்ள வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் யாரும் சேதனை மேற்கொள்ளவில்லை.