தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தகக்காட்சி

புத்தகக்காட்சி

புத்தகக்காட்சி


ADDED : ஜன 02, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பறவைகளைப் பாடுவோம்

தொகுப்பாசிரியர்: மலர்விழி, பலராமன்

பக்கம்: 104 விலை: ரூ.110

வெளியீடு: காக்கைக்கூடு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பறவைகளின் அழகை சிறுவர்கள் உணரும் வகையிலும் பாரதி, நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதிதாசன், வாணிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, வயலுார் சண்முகம் உள்ளிட்டோர் எழுதிய கவிதைகள் உள்ளன.

பனையடி

ஆசிரியர்: ரா.செல்வம் ஐ.ஏ.எஸ்.,

பக்கம்: 208 விலை: ரூ. 200

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

அரசுப்பள்ளியின் மண்தரையில் படிக்கும் சராசரி மாணவன் தமிழ். தன் கால் முடக்கிய அவமானங்கள், துயர்களை உதறி, 'கரைக்குள் காட்டாறு அடங்க வேண்டியதில்லை' என்ற ஒற்றை வரியைப்பற்றி மேலெழும் கதை. துவளும் இளைஞர்கள் படிக்க வேண்டிய நாவல்.

---இன்னும் இசையுண்டு

இந்த வீணையில்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

பக்கம்: 194 விலை: ரூ.230

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

நவீன கவிஞர்களின் வரிசையில் முன்பக்கத்தில் இடம்பெறும் மூத்த கவிஞர், ஈரோடு தமிழன்பன். இடைவிடாமல் கவிதைகளில் இயங்குகிறார் என்பதற்கு, 'குழந்தையிடம் பழக வரும் சொல் மலரின் இதழோடு பழக வரும் அழகைப்போல' என்பதில் அறியலாம். இப்படி நிறைய...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us