/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை
/
ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை
ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை
ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை
ADDED : பிப் 11, 2026 06:29 AM

அயனாவரம்: அயனாவரம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50; ஓட்டுநர். இவரது மூத்த மகள் சுப்பு சவுமியா, 20, அண்ணா சாலையில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார்.
தாய் உயிரிழந்த நிலையில், தந்தை அரவணைப்பில் வளர்ந்து வந்தார். நேற்று முன்தினம், சுப்பு சவுமியா கல்லுாரிக்கு சென்று மாலை வீடு திரும்பியவர், அறையின் கதவை தாழிட்டு கொண்டார்.
பின், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தங்கை சவுந்தர்யா, பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, சுப்பு சவுமியா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அயனாவரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.
அதில், சுப்பு சவுமியா, கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த சதீஷ்குார், 22, என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 4ம் தேதி சேத்துப்பட்டு அருகில் ரயில் முன், 'ரீல்ஸ்' மோகத்தில் சதீஷ்குமார் வீடியோ எடுத்தபோது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
காதலனின் இறுதி சடங்கில் பங்கேற்க தந்தை மறுத்ததால் மன உளைச்சலில் சுப்பு சவுமியா தற்கொலை செய்தது தெரியவந்தது.

