sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

/

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது


ADDED : ஜன 14, 2025 12:41 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

கண்ணகி நகர்: கண்ணகி நகர், எழில் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 55; ஆட்டோ ஓட்டுநர். நேற்று அதிகாலை, பேட்டரி காரில் வந்த ஐந்து பேர், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலரின் வாகனத்தில் இருந்து, பேட்டரிகளை திருடினர். சத்தம் கேட்டு, பகுதிவாசிகள் ஐந்து பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். விடாமல் துரத்தியதில், ஐந்து பேரும் சிக்கினர். அவர்களை, கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். தப்பி செல்ல முயன்றபோது, கீழே விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். விசாரணையில், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், 20, மற்றும் நான்கு சிறுவர்கள் என தெரிந்தது. அவர்கள், 9 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us