/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணுடன் பழகிய பஸ் ஓட்டுனருக்கு அடி உதை
/
பெண்ணுடன் பழகிய பஸ் ஓட்டுனருக்கு அடி உதை
ADDED : ஏப் 16, 2025 12:10 AM
முகப்பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர், 49. இவர் மனைவி, மகனுடன், முகப்பேர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு அறிமுகமான, அரசு பேருந்து ஓட்டுனரான சிலம்பரசன், 36, என்பவர், சங்கரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, சங்கரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சங்கர், சிலம்பரசனை கண்டித்துள்ளார்.
இதை பொருட்படுத்தாத சிலம்பரசன், சங்கரின் மனைவியை பார்க்க நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்து சென்ற சங்கர், சிலம்பரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.
அந்நேரம் அங்கு வந்த சங்கரின் 19 வயது மகனும், சிலம்பரசனை தாக்கியதாக தெரிகிறது. தலையில் காயமடைந்த சிலம்பரசன், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்கு பதிந்த நொளம்பூர் போலீசார், சிலம்பரசனை தாக்கிய சங்கர் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

