sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து

/

பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து

பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து

பஸ் ஓட்டுநர் - வியாபாரி மோதல் பிராட்வேயில் முடங்கிய போக்குவரத்து


ADDED : ஆக 08, 2025 01:59 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூக்கடை,

பிராட்வேயில், மாநகர பேருந்து ஓட்டுனர், தள்ளுவண்டி கடைக்காரர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு செல்லும் தடம் எண்: 15எப் மாநகர பேருந்தை, ஓட்டுநர் சுரேஷ் இயக்கிச் சென்றார். நேற்று மாலை, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது, இடையூறாக நின்ற தள்ளுவண்டிகடைக்காரரை தள்ளி போக சொல்லியுள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள், தள்ளுவண்டிக்காரரான யுவராஜை, 40, கண்டித்துள்ளனர்.

இதில், யுவராஜ் நடத்துனர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணியர் அவதிக்குள்ளாகினர்.

எஸ்பிளனேடு போலீசார் அவர்களை சாமாதானம் செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும் என, ஓட்டுனர்கள் வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து, தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின், போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us