/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருத்தணி கோவிலுக்கு தொழிலதிபர் பஸ் காணிக்கை
/
திருத்தணி கோவிலுக்கு தொழிலதிபர் பஸ் காணிக்கை
ADDED : பிப் 13, 2025 12:14 AM

திருத்தணி, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி பேருந்து நிலையம் அருகே, தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு, இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் அதிகளவில் பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். விழா நாட்களில், பேருந்துகள் பற்றாக்குறையால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து ஒன்றை, திருத்தணி முருகன் கோவிலுக்கு, காணிக்கையாக நேற்று வழங்கினார். பேருந்துக்கான ஆர்.சி., புத்தகம் மற்றும் சாவியை, கோவில் அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோரிடம், தொழிலதிபர் வழங்கினார். வரும் நாட்களில், கோவில் சார்பில், மூன்று பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

