sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'காக்கும் கரங்கள்' திட்டம் மாஜி வீரர்களுக்கு அழைப்பு

/

'காக்கும் கரங்கள்' திட்டம் மாஜி வீரர்களுக்கு அழைப்பு

'காக்கும் கரங்கள்' திட்டம் மாஜி வீரர்களுக்கு அழைப்பு

'காக்கும் கரங்கள்' திட்டம் மாஜி வீரர்களுக்கு அழைப்பு


ADDED : மார் 19, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 19, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில் கடனுதவி பெற மாஜிப்படை வீரர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை தொழில் முனைவராக உருவாக்கும் 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தில், தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதில், 30 சதவீதம் அசல் மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us