sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒரே வாரத்தில் மூடப்பட்ட 'ஒப்பனை அறை' தொழுவத்திற்கு தாரைவார்ப்பு

/

ஒரே வாரத்தில் மூடப்பட்ட 'ஒப்பனை அறை' தொழுவத்திற்கு தாரைவார்ப்பு

ஒரே வாரத்தில் மூடப்பட்ட 'ஒப்பனை அறை' தொழுவத்திற்கு தாரைவார்ப்பு

ஒரே வாரத்தில் மூடப்பட்ட 'ஒப்பனை அறை' தொழுவத்திற்கு தாரைவார்ப்பு


ADDED : பிப் 13, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறின.

இதற்காக, பல கோடியில் 'இ - டாய்லெட்' எனும் எலக்ட்ரானிக் கழிப்பறைகளை சாலையோரங்கள், பேருந்து நிலையங்களில் அமைத்தன. அவையும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறமால் பழுதடைந்தன.

தற்போது, 'சிங்கார சென்னை' திட்டத்தில், மக்களின் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்ட அறைகளுடன் கூடிய, ஒப்பனை அறைகளாக கழிப்பறைகள் கட்டப்பட்டன.

பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இவ்வகையான கழிப்பறைகளும், முறையாக பராமரிக்காமல் வழக்கம் போல் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க துவங்கி உள்ளன.

குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள, சாலையோரத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த வாரம் புதிதாக ஒப்பனை அறை திறந்து வைக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் மோட்டார் பழுதடைந்து தண்ணீரின்றி கழிப்பறை மூடப்பட்டது. தற்போது, மாடுகள் கட்டி வைக்கப்படும் தொழுவமாக மாறி வருகின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் கவுன்சிலர் மற்றும் மாநகராட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''ஆண்டுதோறும் கழிப்பறைக்காகவே, பல லட்சம் ஒதுக்கப்படுகிறது. அவற்றை முறையாக பயன்படுத்துவதும் கிடையாது; பராமரிப்பதும் கிடையாது.

அரும்பாக்கத்தில் ஒரே வாரத்தில், ஒப்பனை அறை இழுத்து மூடப்பட்டது. அரசு இதை கவனத்தில் வைத்து, வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us