sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் கார்களால் சிரமம்

/

அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் கார்களால் சிரமம்

அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் கார்களால் சிரமம்

அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் கார்களால் சிரமம்


ADDED : செப் 04, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அண்ணா நகர், மூன்றாவது அவென்யூ பிரதான சாலையில், பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் சிரமப்படுகின்றனர்.

அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில், டவர் பூங்கா நுழைவாயில், அண்ணா ரவுண்டானா, கந்தசாமி கல்லுாரி, காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.

இச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களும் செயல்படுகின்றன.

போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதும், சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்வதும் அதிகரித்து வருகிறது.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது நடைமுறை ரத்து செய்யப்பட்டதால், வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us