/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆயிரம்விளக்கில் குடிசைகள் கணக்கெடுப்பு
/
ஆயிரம்விளக்கில் குடிசைகள் கணக்கெடுப்பு
ADDED : நவ 12, 2024 12:37 AM
சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில், அழகிரி நகர் உள்ளது. இங்குள்ள, 350க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் அடுக்குமாடி வீடுகளாக கட்டிக் கொடுப்பதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று, பொறியாளர் ஜேசு ஆண்டனி தலைமையில், குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
அப்போது அங்கு, குடிசையில்லாத சிலரும், தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதால், சிறிது நேரம் கணக்கெடுப்பு பணி நிறுத்தப்பட்டது.
பின், வாய்த்தகராறில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதும், கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதில், 110 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

