/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - ஆவடி 4 மின்சார ரயில்கள் ரத்து
/
சென்ட்ரல் - ஆவடி 4 மின்சார ரயில்கள் ரத்து
ADDED : மார் 04, 2025 08:38 PM
சென்னை:சென்ட்ரல் - ஆவடி தடத்தில், நான்கு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
ஆவடி ரயில்வே யார்டில், மேம்பாட்டு பணி நாளை அதிகாலை 3:30 மணி வரை நடக்கிறது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
★ சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 11:40 மணி மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது
★ சென்ட்ரல் - ஆவடி அதிகாலை 12:15 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது
★ பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 7:35 மணி இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
★ சூலுார்பேட்டை - சென்ட்ரல் இரவு 9:00 மணி ரயில், இன்று கொருக்குப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.