/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு
/
கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : நவ 02, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,
மேற்கு தாம்பரம், கடப்பேரியை சேர்ந்தவர் சுமதி, 40. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கடப்பேரி, ஜவஹர் மருத்துவமனை அருகே நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர், சுமதியைவழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நான்கு சவரன் செயினை அறுத்து தப்பினர்.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.