sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

/

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி


ADDED : நவ 05, 2025 03:05 AM

Google News

ADDED : நவ 05, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி ஆழமும் கொண்டது. கன மழையால் ஏரி நிரம்பியதையடுத்து, கடந்த 21ம் தேதி முதல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப் படுகிறது.

கன மழையின் போது, 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மழை குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, 100 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், விட்டு விட்டு பெய்யும் கன மழை காரணமாக, ஏரிக்கு 837 கன அடி நீர் வருகிறது.

இதனால், ஏரியின் நீர்மட்டம், நேற்று 22.08 அடியாக உயர்ந்தது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, ஏரியின் கொள்ளளவு, 3.14 டி.எம்.சி.,யாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே நாளில் ஏரியின் கொள்ளளவு, 1.62 டி.எம்.சி., மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ஏரியில் இரு மடங்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.






      Dinamalar
      Follow us