/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கடற்கரை யார்டு மேம்பாடு விரைவு ரயில்களின் சேவை மாற்றம்
/
சென்னை கடற்கரை யார்டு மேம்பாடு விரைவு ரயில்களின் சேவை மாற்றம்
சென்னை கடற்கரை யார்டு மேம்பாடு விரைவு ரயில்களின் சேவை மாற்றம்
சென்னை கடற்கரை யார்டு மேம்பாடு விரைவு ரயில்களின் சேவை மாற்றம்
ADDED : அக் 26, 2024 03:01 AM
சென்னை,:ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக, சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
★ எழும்பூர் - ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில், சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 10:45 மணிக்கு இயக்கப்படும்
★ விசாகப்பட்டினம் - எழும்பூருக்கு இன்று இரவு 7:00 மணிக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும்
★ காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு மதியம் 2:30 மணி ரயில், இன்று கொருக்குப்பேட்டை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுவதால், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் வழியாக செல்லாது. பெரம்பூரில் நின்று செல்லும்
★ காச்சிகுடா - செங்கல்பட்டு மாலை 5:00 மணி விரைவு ரயில், இன்று திருத்தணி, மேல்பாக்கம் வழியாக செங்கல்பட்டு செல்வதால், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் செல்லாது
★ லோக்மான்ய திலக் - காரைக்கால் இன்று மதியம் 1:15 மணி ரயில், திருத்தணி, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக இயக்கப்படாது
★ மதுரை - ஜபல்பூர் இரவு 11:35 மணி ரயில், இன்று செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படுவதால், தாம்பரம், எழும்பூர் வழியாக செல்லாது. பெரம்பூரில் நின்று செல்லும்
★ மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி நள்ளிரவு 12:55 மணி ரயில், வரும் 27ம் தேதி, செங்கல்பட்டு, பெரம்பூர், அரக்கோணம் வழியாக இயக்கப்படுவதால், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது
★ திருச்சி - ஆமதாபாத் காலை 5:40 மணி ரயில், வரும் 27ம் தேதி, செங்கல்பட்டு, திருத்தணி வழியாக செல்வதால், தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணத்தில் நின்று செல்லாது
★ செங்கல்பட்டு - காச்சிகுடா, செங்கல்பட்டு - காக்கிநாடா போர்ட்டு விரைவு ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து வழக்கமான நேரத்தை காட்டிலும், ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது