/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுரங்க போட்டி டிசம்பர் 5ல் துவக்கம்
/
சதுரங்க போட்டி டிசம்பர் 5ல் துவக்கம்
ADDED : நவ 22, 2024 12:32 AM
சென்னை,இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவில், மவுண்ட் செஸ் அகாடமி, சீயோன் ஆல்வின் பள்ளி சார்பில், சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
போட்டிகள், மெப்பேட்டில் உள்ள சியோன் ஆல்வின் பள்ளி வளாகத்தில், டிச., 5ல் துவங்கி, 8ம் தேதி வரை நடக்கின்றன. இவற்றில், 8, 10, 12, 14 மற்றும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவு, 'வெட்ரன்ஸ்' உள்ளிட்ட பல்வேறு பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, மொத்தம் 3 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், நான்கு நாட்களில் எட்டு சுற்றுகள் நடக்கின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், டிச., 2க்குள், 94441 35579, -90436 90467 என்ற எண்களில் பதிவு செய்யலாம்.