sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

/

பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

பருவமழையை எதிர்கொள்வோம் முதல்வர் ஸ்டாலின் உறுதி


ADDED : செப் 25, 2024 12:09 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கொளத்துார் ஜி.கே.எம்., காலனி, 12வது தெருவில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, 'சிங்கார சென்னை 2.0' நிதி 2.43 கோடி; எம்.பி., வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி 1.80 கோடி ரூபாய் என, மொத்தம் 4.23 கோடி ரூபாயில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மதுரை சாமி மடத்தில், 26.43 லட்சம் ரூபாய் செலவில், உடற்பயிற்சிக் கூடம் புதுப்பிக்கப்பட்டது. நேர்மை நகர் மயான பூமியில், 26.29 லட்சம் ரூபாய் செலவில், நீத்தார் நினைவு மண்டபம் புதிதாக கட்டப்பட்டது.

இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவியருக்கு, புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

முத்துகுமரப்பா தெருவில் 13.47 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்படுகிறது. இதை பார்வையிட்ட முதல்வர், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், பேப்பர் மில்ஸ் சாலையில், வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்கள், 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்த இடத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.

பின், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இரண்டு நாட்களில், நானும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். கொளத்துார் தொகுதி என் சொந்த தொகுதி. பகுதி மக்கள் என்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல தான் பார்ப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிப்புதான் ஊன்றுகோல்

வளசரவாக்கம், சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், ஒன்பது பள்ளிகளில் பயிலும் 1,480 மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், ''சைக்கிள் நேர விரயத்தை குறைப்பதுடன், உலக வெப்பமயமாதலையும் கட்டுப்படுத்தப்படுகிறது. படிப்பு என்பது எனக்கு எட்டாகனியாக இருந்தது. நான், அமைச்சராக உள்ளேன். பதவி இருக்கும் வரை தான் அமைச்சர். ஆனால், நாம் இறக்கும் வரை, நமக்கு ஊன்றுகோலாக இருப்பது படிப்பு மட்டும் தான்,'' என்றார்.








      Dinamalar
      Follow us