sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொடர் சிகிச்சையால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்

/

தொடர் சிகிச்சையால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்

தொடர் சிகிச்சையால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்

தொடர் சிகிச்சையால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்


ADDED : ஏப் 03, 2025 12:45 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்,உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.

இதில், மருத்துவமனை முதல்வர் மகேஷ், நிலைய மருத்துவ அதிகாரி சாந்திமலர் மற்றும் மருத்துவர்கள், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த மையத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சையின் மூலம் தங்கள் குழந்தைகள், மற்ற குழந்தைகள் போல இயல்பான நிலைக்கு வர எவ்வாறு உதவியது என்பது குறித்தும், பெற்றோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி குறித்து, குழந்தைகள் நல மருத்துவ துறை தலைவர் கணேஷ் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாக ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில், ஆட்டிசம் ஆரம்ப அறிகுறிகள் உள்ள, 325 குழந்தைகள் பதிவு செய்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர் சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், நல்ல முன்னேற்றம் அடைகின்றனர்.

2 வயதிற்குள் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்தால், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும்.

வடசென்னையை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் செயல்படுகிறது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இந்த மையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us