sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விதிமீறிய 55 கட்டடத்திற்கு நோட்டீஸ் * 25க்கு 'சீல்' வைத்தது சி.எம்.டி.ஏ.,

/

விதிமீறிய 55 கட்டடத்திற்கு நோட்டீஸ் * 25க்கு 'சீல்' வைத்தது சி.எம்.டி.ஏ.,

விதிமீறிய 55 கட்டடத்திற்கு நோட்டீஸ் * 25க்கு 'சீல்' வைத்தது சி.எம்.டி.ஏ.,

விதிமீறிய 55 கட்டடத்திற்கு நோட்டீஸ் * 25க்கு 'சீல்' வைத்தது சி.எம்.டி.ஏ.,


ADDED : ஏப் 10, 2025 12:23 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பெருநகரில், கடந்த ஓராண்டில், 55 விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளித்து, 25 கட்டடங்களுக்கு், 'சீல்' வைக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகரில், விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை; உயர் நீதிமன்றம், முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக உத்தரவு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை விபரங்களை, இணையதளத்திலும் சரியாக வெளியிடப்படுவதில்லை. இதனால், வீடு வாங்குவோர், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விபரங்களை அறிய முடிவதில்லை.

இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 2024ம் ஆண்டில், விதிமீறல் புகார்கள் அடிப்படையில், 55 கட்டடங்களுக்கு அமலாக்கப்பிரிவு வாயிலாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில், 25 விதிமீறல் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன.

விதிமீறல் புகார்கள் உறுதியான நிலையில், ஆறு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கான பிரிவில் காணப்படும் அலுவலர் பற்றாக்குறையை சரி செய்யும்படி, மேலதிகாரிகளிடம் கோரி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துாங்கி வழியும் இணையதளம்

அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் விபரங்கள் இப்படி இருந்தாலும், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இந்த விபரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. கடந்த, 2024ல், 14 வீதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, எட்டு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

***






      Dinamalar
      Follow us