sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை

/

தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை

தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை

தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை


ADDED : ஏப் 24, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,'அவுட்சோர்சிங்' முறையில் நாளொன்றுக்கு, 716 ரூபாய் சம்பளத்தில், தினக்கூலி பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் ஒவ்வொரு நிலை பணியிடத்தையும் எப்படி நிரப்ப வேண்டும் என்பதற்கு, தனியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.

இதன்பின், அலுவலக பணிகள், கணினி உதவியாளர்கள் என பல்வேறு நிலைகளில் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எல்காட் நிறுவனம் பரிந்துரைத்த நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதிலும், அதிக செலவு மற்றும் குறைபாடுகள் காணப்பட்டதால், தினக்கூலி பணியாளர்களை நியமிப்பது நிறுத்தப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட சில பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது, தினக்கூலி அடிப்படையில், 23 பேரை அனுப்புவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளில் சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது. நாளொன்றுக்கு, 716 ரூபாய் என்ற அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு மட்டும் பணி புரியும் வகையில் தினக்கூலி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத தொடர்பான அறிவிப்பை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us