sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து

/

சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து

சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து

சென்னைக்குள் நுழைய பா.ஜ., நிர்வாகிக்கு கமிஷனர் விதித்த தடை உத்தரவு ரத்து


ADDED : ஆக 21, 2025 01:19 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆக. 21-

சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என, பா.ஜ., மாநில பட்டியலின அணி செயலர் சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பா.ஜ., மாநில பட்டியலின அணி செயலர் சூர்யா என்ற நெடுங்குன்றம் சூர்யா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி, சென்னைக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த ஏப்.7ல் கொளத்துார் காவல் துணை கமிஷனர் 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசுக்கு சூர்யா பதில் அளித்த நிலையில், ஏப்., 25ம் தேதி முதல் ஓராண்டுக்கு, சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சூர்யா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சூர்யா தரப்பில், 'காவல்துறையின் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும் கூட, அதை பரிசீலிக்காமல் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மனுதாருக்கு எதிரான நோட்டீசில் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல், சென்னைக்குள் ஒரு ஆண்டுக்கு நுழையக்கூடாது என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us