sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடு பிடித்த ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது புகார்

/

மாடு பிடித்த ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது புகார்

மாடு பிடித்த ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது புகார்

மாடு பிடித்த ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது புகார்


ADDED : மார் 15, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குன்றம், கோயம்பேடில், சாலையில் திரிந்த மாட்டை பிடிக்கச் சென்ற மாநகராட்சி ஊழியரை தாக்கிய, மாடு உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டில் பணிபுரியும் மாநகராட்சி ஊழியர் கன்னியப்பன், 46, சக ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று, நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, மாடு உரிமையாளரான ராகேஷ் என்பவர், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரமடைந்த அவர், கன்னியப்பனின் மொபைல்போனை பிடுங்கி, அவர் மீதே வீசினார். அத்துடன் அவரை ஆபாசமாக பேசி, காலால் உதைத்து சரமாரியாக தாக்கினார். இதை, அங்கிருந்த சக ஊழியர் வீடியோவாக பதிவு செய்தார்.

பின், ராகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன், இவரது மாட்டிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆத்திரத்தில் தாக்கியது விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us