sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரை தாக்கியதாக எஸ்.எஸ்.ஐ., மீது புகார்

/

வாலிபரை தாக்கியதாக எஸ்.எஸ்.ஐ., மீது புகார்

வாலிபரை தாக்கியதாக எஸ்.எஸ்.ஐ., மீது புகார்

வாலிபரை தாக்கியதாக எஸ்.எஸ்.ஐ., மீது புகார்


ADDED : ஜூலை 31, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி, ஜீவானந்தம் நகரைச் சேர்ந்தவர் பிலால், 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, காய்கறி வாங்க, ஆவடி தீயணைப்பு நிலையம் அருகே, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 'புல்லட்' பைக்கில் வந்த இரு இளைஞர்கள், அவரது பைக்கை இடிப்பது போல் வந்ததாக கூறப்படுகிறது.

பிலால் அதை தட்டிக்கேட்ட போது, மது போதையில் இருந்த இளைஞர்கள், பிலாலை தகாத வார்த்தைகளால் பேசி, தகராறில் ஈடுபட்டனர்.

தகராறில் ஈடுபட்டதில் ஒருவர், ஆவடி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சாதிக், 50, என்பவரின் மகன் என தெரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சாதிக் மற்றும் அவரது நண்பர் தஸ்தகிர் வந்துள்ளனர். பின், நான்கு பேரும் சேர்ந்து, பிலாலை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த இரு தரப்பினரும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆவடி போலீசில், இரு தரப்பும் புகார் அளித்தனர். நீண்ட பேச்சுக்கு பின் இருவரும் சமாதானமாயினர்.






      Dinamalar
      Follow us